search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளாவில் கனமழை"

    • கனமழை காரணமாக மக்கள் வெளியே செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
    • அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மக்கள் வெளியே செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று (4.10.2023) திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • மழை தொடருவதால் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
    • தொடர்மழை காரணமாக அம்பலப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக கேரளாவில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.

    சில மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கனமழை கொட்டிவரும் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

    நேற்று பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எசசரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    அந்த மாவட்டங்களில் 64 முதல் 115 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை தொடருவதால் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரத்தில் பல வீடுகளில் மழைநீர் புகுந்தது. அந்த பகுதிகளை சேர்ந்தவர்களை மீட்கவும், மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தொடர்மழை காரணமாக அம்பலப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காட்டூரை சேர்ந்த ஜித்தின் (வயது27)என்ற வாலிபரும், மலப்புரத்தை சேர்ந்த முகம்மது முகம்மில்( 8) என்ற சிறுவனும் பலியாகினர்.

    அதேபோல் சம்பகுளத்தை சேர்ந்த வேலாயுதன் நாயர்(84) என்பவர் குளத்தில் மூழ்கி இறந்தார். திருவனந்தபுரத்தில் விதுரை சேர்ந்த சோமன்(62) என்பவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். காணாமல் போன அவரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கேரள மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி வரை மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மலை மற்றும் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

    • அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யும்.
    • 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பகுதிகள் மற்றும் காட்டு பகுதி சாலைகளில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது.

    தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த கனமழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அந்த மாவட்டங்களில் இன்று பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரள கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், இதனால் வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கோழிக்கோடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதன்படி கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், ஆற்றங்கரைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு செ்ல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பகுதிகள் மற்றும் காட்டு பகுதி சாலைகளில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி குவாரி தொடர்பான நடவடிக்கைகள், சுரங்கம் மற்றும் கிணறு கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • கேரள மாநிலத்தில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
    • கேரள கடல் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. பல மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வருகிற 24-ந்தேதி வரை மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் வட மாவட்டங்களில் அதிகமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கேரள கடல் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • கோட்டையம், திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்கிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழைக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்து உள்ளன.

    மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 1,023 வீடுகள் பகுதி அளவிலும், 51 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை படகுகள் மூலமாக மீட்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 200 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தற்போதைய நிலவரப்படி 7,850 பேர் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கோட்டையம், திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் மழைக்கு மேலும் 8 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களை தவிர பல மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. கடலோர பகுதிகளில் கடும் சூறைக்காற்று வீசுவதால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடித்து வருகிறது.

    கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பலத்த காற்று மற்றும் மரங்கள் சாய்ந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
    • கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 3 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

    மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று பல மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

    பலத்த காற்று மற்றும் மரங்கள் சாய்ந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பாலக்காடு வடக்கஞ்சேரியில் தென்னை மரம் விழுந்ததில், தங்கமணி என்பவர் உயிர் இழந்தார்.

    கனமழை காரணமாக மத்திய கேரளாவில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பலத்த காற்று காரணமாக பல மாவட்டங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடித்தப்படி உள்ளன.

    கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 3 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு இருவஞ்சி புழாவில் ஒருவரும், மலப்புரம் அமரம்பலத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    கனமழை நீடிப்பதால் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் பெரியாறு, முத்திரபுழா ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் வருகிற சனிக்கிழமை வரை மோசமான வானிலையே நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
    • கேரளாவில் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு உஷார் நிலையில் இருக்கும் படி அரசு அறிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கோடை மழை பெய்து வருகிறது. மலையோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை வருகிற 11-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    குறிப்பாக மலையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் அப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதை தொடர்ந்து கேரளாவில் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு உஷார் நிலையில் இருக்கும் படி அரசு அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்க கடலில் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பல மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.

    இதன் காரணமாக வருகிற 4-ந் தேதி வரை கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

    இதுபோல வங்க கடலில் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

    கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி கேரள கடல் பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்பி வருகிறார்கள்.

    • தொடர் மழை காரணமாக நேற்று இரவு மூணாறு பகுதியில் 2 இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • குண்டலா அணை மற்றும் மூணாறு எக்கோ பாயிண்ட் அருகே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு மூணாறு பகுதியில் 2 இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. குண்டலா அணை மற்றும் மூணாறு எக்கோ பாயிண்ட் அருகே இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

    குண்டலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது அந்த வழியே வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இதில் ஒரு வாகனம் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். கோழிக்கோடு அருகே உள்ள வடகராவில் இருந்து 3 வாகனங்களில் சிலர் சுற்றுலா புறப்பட்டுள்ளனர். அந்த வாகனங்களில் ஒன்று தான் நிலச்சரிவில் சிக்கியுள்ளது. அந்த வாகனம் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

    அதிர்ஷ்டவசமாக அந்த வாகனத்தில் டிரைவர் ரூபாஷ் (வயது 40) மட்டுமே இருந்துள்ளார். விபத்து பற்றி கேள்விப்பட்டதும் மூணாறு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் காட்டு யானைகள் அடிக்கடி வரும் பிரதேசத்தில் சுற்றுலா வாகனம் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இருப்பினும் மழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாக இரவில் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீண்டும் மீட்பு பணியில் குழுவினர் ஈடுபட்டனர். மாயமான டிரைவர் ரூபாஷ் கதி என்ன? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    இதற்கிடையில் நிலச்சரிவு காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூணாறு-வட்டவாடா சாலையில் வாகனங்கள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

    • வயநாட்டில் பல இடங்களில் பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
    • தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியதால் மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

    இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் ஆலப்புழா, பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற 22-ந்தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. இதையடுத்து இந்த 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் மண் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுபோல வயநாட்டில் பல இடங்களில் பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியதால் மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.

    • மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 22 பேர் பலியாகி உள்ளனர். 250-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
    • மழையால் வீடுகளை இழந்தவர்களுக்காக மாநிலம் முழுவதும் 221 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    மத்திய மற்றும் வடக்கு கேரளா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது பெய்து வரும் மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    இதன் காரணமாக திருச்சூர், இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் அதிக மழை பெய்யும் என்று கூறப்பட்டிருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

    மழை அதிகம் பெய்யும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்களுடன் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    இவர்கள் மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து வருகிறார்கள்.

    மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 22 பேர் பலியாகி உள்ளனர். 250-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

    மழையால் வீடுகளை இழந்தவர்களுக்காக மாநிலம் முழுவதும் 221 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 7 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து கொடுத்துள்ளது.

    கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இடுக்கி அணை, பெரிங்கல்குத்து அணை அணைகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். இந்த அணைகளில் இருந்து தற்போது உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கேரளாவில் மழை அதிகம் பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளிக்க மாநில அரசு அறிவுறுத்தி இருந்தது.

    அதன்படி ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை விடப்படுவதாக நேற்று முன்தினம் இரவே அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து விட்டனர்.

    ஆனால் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் நேற்று காலையில் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த தகவல் மக்களை சென்றடையும் முன்பு பெரும்பாலான பள்ளி மாணவ, மாணவிகள் பலரும் பள்ளிக்கு சென்று விட்டனர்.

    இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் அதிருப்தி தெரிவித்தனர். கலெக்டரின் நடவடிக்கையையும் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர் இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தாமதமாக விடுமுறை வழங்கிய எர்ணாகுளம் கலெக்டரிடம் விளக்கம் கேட்க வேண்டும், விடுமுறை அறிவிப்புக்கான சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

    ×